×

திருவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரங்கமன்னாருக்கு 108 மலர்களால் புஷ்ப யாகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

 

திருவில்லிபுத்தூர், ஜூலை 26: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 108 மலர்களால் ஆண்டாள் ரங்க மன்னருக்கு நேற்று மாலை புஷ்ப யாக நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டம் நிறைவடைந்த உடன் புஷ்ப யாகம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் புஷ்பயாக நிகழ்ச்சி நேற்று கோயிலில் நடைபெற்றது. இதற்காக 108 மலர்கள் தயார் செய்யப்பட்டு அத்தப் பூ கோலம் போடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து 108 மலர்களால் ஆண்டாள் ரங்க மன்னருக்கு புஷ்பயாக நிகழ்ச்சி நடைபெற்றது. புஷ்பயாக நிகழ்ச்சியை முன்னிட்டு ஆண்டாள் ரங்க மன்னர் சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

The post திருவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரங்கமன்னாருக்கு 108 மலர்களால் புஷ்ப யாகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Andal Rangamannar ,Thiruvilliputhur ,Sami ,Tiruvilliputhur ,Andal Ranga King ,Tiruvilliputhur Andal Temple ,Sami Darshan ,
× RELATED ராணிப்பேட்டை அருகே உள்ள...